கொல்கத்தா:மேற்கு வங்க மாநிலத்தில், எதிர்காலத்தில் பாஜக ஆட்சியமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சந் தன் மித்ரா கூறியுள்ளார்.
மேற்குவங்கத்தில், பாஜக 18 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள நிலையில், சந்தன் மித்ரா, தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக் குப் பேட்டியளித்துள்ளார்.
அதில் “பாஜகவின் வெற்றி கண்டிப்பாக ஆச்சரியமானதே. ஏனென் றால், ஒராண்டுக்கு முன்னதாகக் கூடஇங்கு பாஜக இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் அவர்களது வளர்ச்சி ஆழமாகியுள்ளது. எதிர்காலத்தில் மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேற்கு வங்கத்தில் பாஜக வளர்ந்து விட்டது” என்று சந்தன் மித்ரா கூறியுள்ளார்.இவர், கடந்த ஆண்டுதான் பாஜக-விலிருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோற்றவர்கள் எல்லாம் தோற்றவர்கள் அல்ல.. மம்தா புதிய தத்துவம் மேற்குவங்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைப்பெற்ற மக்களவைத் தேத்லில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் 34 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. பாஜக-வுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்திருந்தன. ஆனால், 2019 தேர்தலில் பாஜக 18 இடங்களில் முன்னிலை பெற்றிருப்பதும், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 23 என்ற எண்ணிக்கைக்கு சரிந்ததும், மம்தா பானர்ஜியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதையடுத்து, வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள- அதேநேரத்தில், “தோற்றவர்கள் எல்லாம் தோற்றவர்கள் அல்ல” என்று புதிய தத்துவம் ஒன்றை மம்தா பானர்ஜி உதிர்த் துள்ளார். மேற்குவங்கத்தில் பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் தவிர, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஓரிடத்தைப் பெற்றுள்ளது. இடதுசாரிகளுக்கு ஓரிடமும் கிடைக்கவில்லை.